Tuesday, March 27, 2012

பாகூர் பேருந்து நிலைய பணிகளை உடனே துவக்க வேண்டும்


புதுச்சேரி,மார்ச்-26

பாகூர் பேருந்து நிலைய பணிகளை உடனே துவக்க வேண்டும் என்று வாலிபர் சங்க கொம்யூன் மாநாடு புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது.
இந்திய ஜனநாய வாலிபர் சங்கத்தின் பாகூர் கொம்யூன் கமிட்டி மாநாடு பாகூரில் உள்ள பகத்சிங் படிபகத்தில் நடைபெற்றது.இம்மாநாட்டிற்கு கொம்யூன் கமிட்டி தலைவர் சரவணன் தலைமை தாங்கினார்.மாநாட்டை பிரதேச செயலாளர் தமிழ்ச்செல்வன்துவக்கிவைத்து பேசினார்.கொம்யூன் செயலாளர் அரிதா° வேலை அறிக்கையை தாக்கல் செய்து பேசினார். பிரதேச துணை தலைவர் சரவணன் வாழ்த்தி பேசினார்.இம்மாநாட்டில் புதிய கொம்யூன் தலைவராக ரா.வெங்கடேசனும்,செயலாளராக வ.அரிதாசும்,பொருளாளராக தணிகா உள்ளிட்ட 15பேர் கொண்ட கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு செய்யயப்பட்டனர்.
பாகூர் கொம்யூனில் நுhறுநாள் வேலை உறுதிதிட்டத்தை உடனே துவக்க வேண்டும்.கொம்யூனில் உள்ள தொழிற்சாலைகளில் ஒப்பந்த தொழிலாளர் முறையை ரத்து செய்து நிரந்தர பணியாக மாற்ற வேண்டும்.பேருந்து நிலைய பணிகளை உடனே துவக்க வேண்டும்.பாகூரில் மருத்துவமணையின் தரம் உயர்த்தி 24 மணிநேரமும் செயல்படுகின்ற மருத்துவமணையாக மாற்ற வேண்டும்.விளைநிலங்களை ரியல் எ°டேட்டாக மாற்றப்படுவதை தடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மாணங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

No comments:

Post a Comment