Sunday, April 28, 2013

வாலிபர் சங்க மாநில மாநாட்டை விலக்கி புதுச்சேரியில் ஆட்டோ பிரச்சாரம்

புதுச்சேரி,ஏப்-28
வாலிபர் சங்க மாநில மாநாட்டை விலக்கி புதுச்சேரியில் ஆட்டோ பிரச்சாரம் நடைபெற்றது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 14வது தமிழ்மாநில மாநாடு மே மாதம் 9 ஆம் தேதி துவங்கி  12ஆம் தேதி வரை நாகர்கோவிலில் நடைபெறுகிறது.இம்மாநாட்டையொட்டி புதுச்சேரில் ஆட்டோ பிரச்சாரம் நடைபெற்றது.இப்பிரச்சாரத்திற்கு டிஒய்எப்ஐ நகரகமிட்டி துணை தலைவர் பிரதாப் தலைமை தாங்கினார்.வாலிபர் சங்க புதுவை பிரதேச தலைவர் இரா.சரவணன்,நகரகமிட்டி தலைவர் அழகப்பன், துணை செயலாளர் நாகமுத்து,மாணவர் சங்க பிரதேச செயலாளர் ஆனந்து ஆகியோர் மாநாட்டை விலக்கி பேசினார்கள்.புதுச்சேரி அண்ணாசிலையிலிருந்து துவங்கிய ஆட்டோ பிரச்சாரம் காமராஜர் சிலை,செஞ்சிசாலை,அஐந்தா சிக்னல்,டி.பி தோட்டம் ,முத்தியால்பேட்டை மணிகூண்டு,சோலைநகர் சமூதாய நலக்கூடம் ஆகிய பகுதியில் நடைபெற்றது.

No comments:

Post a Comment