Sunday, April 28, 2013

UDC / LDC பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன உத்தரவை வழங்கக்கோரி

புதுச்சேரி,ஏப்-27
யூடிசி,எல்டிசி பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன உத்தரவை வழங்கக்கோரி புதுச்சேரியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசு துறைகளில் காலியாக உள்ள  150யூடிசி பணியிடங்களுக்கும், 400எல்டிசி பணியிடங்களுக்கும் கடந்த  2012 ஆம் ஆண்டு புதுச்சேரி அரசால் நடத்திய தேர்வு  மூலம் தேர்ச்சி பெற்றனர்.நீதிமன்ற உத்தரவை காட்டி தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இதுநாள் வரை பணி நியமன உத்தரவு வழங்காததை  கண்டித்தும்,உடணடியாக பணி ஆணை வழங்கக்கோரி இப்போராட்டம் நடைப்பெற்றது.

புதுச்சேரி தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்திற்கு மாணவர் பெற்றோர் ஒருங்கினைப்புக்குழுவின் கண்வீனர் தா.முருகன் தலைமை தாங்கினார்.சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன்,அரசு ஊழியர் சம்மேளன கவுரவ தலைவர் பாலமோகனன்,இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பிரதேச தலைவர் சரவணன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.இப்போராட்டத்தில் யூடிசி பணிக்கு தேர்வானவர்கள் திரளானோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment